ராஜபாட்டை விமர்சனம் PDF Print E-mail
Written by Administrator   
Friday, 23 December 2011 20:27



நமது தமிழ்சினிமா ஹீரோக்களை அவ்வப்போது ஏதாவது ஒரு வியாதி பிடித்து ஆட்டும்.

இப்போதைய லேட்டஸ்ட் வியாதி கெட் அப் சேஞ்ச்.
அது ‘ராஜபாட்டை; யில் விக்ரமை
கொஞ்சம் ஓவராகவே பிடித்து ஆட்டியிருக்கிறது.

சில நூறு கோடிகளோடு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படும்
பொட்லூரி.வி.பிரசாத் தயாரிப்பில் வந்திருக்கும் முதல் படம்.
பட விமர்சனம்  எழுதும்போது
இந்த தகவல்கள் எல்லாம் எதுக்கு என்ற கேள்வி வரலாம்.
அதை கடைசியில் பார்ப்போம்.

சில நல்ல படைப்பாளிகள் கூட குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
வயது மூப்பு, தன்னைப்புதுப்பித்துக்
கொள்ளாமை போன்ற சில காரணங்களால் தடுமாறி , ஒரு சில நல்ல படைப்புகளோடு ஓய்ந்து போய்விடுவதுண்டு.

‘வெண்ணிலா கபடிக்குழு’ மற்றும் ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற இரு தரமான படங்களைத்
தந்த இயக்குனர் சுசீந்திரனின் பெயரை திரைக்கதை இயக்கம் என்று போடுகிறார்கள்.
டைட்டில்
கார்டு எழுதும்போது தப்பு எதுவும்  நடந்துவிட்டதோ என்று சந்தேகிக்க வேண்டிய அளவுக்கு
மொத்த படமும் இருந்தால் என்ன செய்வதாம்?

விமர்சகனுக்கு விதிக்கப்பட்ட ஒரு சாபம்.படத்தில் அப்படி என்று ஒன்று இல்லாவிட்டாலும்
கூட ,கதை என்ற ஒன்றை எழுதவேண்டியிருப்பது.

நாயகன் விக்ரம் சினிமாவில் பெரிய வில்லன் ஆகத்துடிக்கும் ஒரு ஸ்டண்ட் பார்ட்டி.பெரியவர்
கே. விஸ்வநாத்துக்கு அவரது பிள்ளை மூலமே ஒரு பிரச்சினை வருகிறது.அனாதைக் குழந்தைகள்
படித்து வரும் அவரது ஆசிரம நிலத்தை அப்பாவை மிரட்டி எழுதி வாங்க நினைக்கிறார். அந்த
நிலத்தை அரசியல் புள்ளி‘ அக்காவுக்கு ’எழுதி வைத்துவிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பது
விஸ்வநாத் பிள்ளையின் நோக்கம்.

இந்த ஆபத்திலிருந்து  கே.விஸ்வநாத்தைக்காப்பாற்ற நினைத்து
அவரைத்தன்னோடு தங்க வைத்துக்கொள்ளும் விக்ரம்.....
.
அடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நீங்கள் பார்த்துச் சலித்த காட்சிகளோடு
கர்ணகொடூரமாய் நகர்கிறது ‘ராஜபாட்டை.’.

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் எது ஒரிஜினல், எது சினிமா சண்டைக்
காட்சி என்று புரிந்து கொள்வதற்குள் நம் மண்டை தீப்புடிக்கிறது.

காமெடியாய் ஃபைட் பண்ணுகிறேன் என்ற எண்ணத்தில்  விக்ரம்  அடிக்கும் லூட்டிகள்  ஜித்தன்ரமேஷ்
ரேஞ்சில் பார்க்க பரிதாபமாய் இருக்கிறது.

58 வயசிலும் காலேஜ் பையனாட்டம், 5வது சீனில் லவ்
பண்ண ஆரம்பித்து 7 வது சீனில் டுயட் பாடி  ரசிகர்களை  வன்கொடுமை செய்வது நியாயமா சியான்?

[இந்தப்படம் டெல்லியில ரிலீஸாகாம பாத்துக்கங்க..இதுல உங்க நடிப்பைப்பாத்தா கண்டிப்பா தேசிய
விருதைத் திரும்ப கேப்பாங்க]

எதோ தேச்சா பாத்திரம் மாதிரி காட்சி அளிக்கும் தீச்சா சேத் தான் ஹீரோயின். நம்மளை விட ஒரு
முப்பத்தஞ்சு வயசு மூத்தவரை லவ் பண்ண விட்டுட்டாங்களேங்கிற  பரிதாபப் பார்வையைத் தவிர நடிக்கிற
முயற்சி எதுலயும் ஈடுபட்ட மாதிரி எந்த அறிகுறியும் தெரியலை.

‘சலங்கை ஒலி’ சங்கராபரணம்’ போன்ற காவியங்களைத் தந்த கே.விஸ்வநாத் முதல் பாதியில்  விக்ரமுக்கு ஹீரோயினை
லவ் பண்ண ஐடியா தருவதெல்லாம் மட்டமான சீன்கள். இதுக்குப்பதில்
கே. விஸ்வநாத்தே கூட தீச்சாவை லவ் பண்ணியிருக்கலாம்.

கொஞ்சம் போனால் முதலமைச்சராகவே ஆகப்போகும் அக்கா [ பாக்க பக்கா ]  விக்ரமை அடிக்க தொடர்ந்து
அடியாட்களை அனுப்புவதும், எல்லா தினுஷான ஆயுதங்களோடும் வரும் கும்பல் விக்ரமிடம் மட்டும்
வெறுங்கையாலேயே அடிபட்டுச்சாவதும்.. ஆண்டவா இன்னும் எத்தனை படங்கள்லதான் பாக்குறது?

.இசை யுவன் ஷங்கர் ராஜா. கதையே இல்லாத படத்துக்கு நல்ல இசை மட்டும் என்னத்துக்கு என்று
நினைத்திருப்பார்போல. ஒளிப்பதிவு மதி. மற்றும் நன்றி கார்டில் 4பேர்.

கதைப்படி, படம் முடியும்போது, வில்லனாக விரும்பும்  விக்ரம் ஹீரோவாக மாறி 2 கோடி சம்பளம் வாங்கும்
நிலைக்கு உயர்ந்து ரீமாசென்னோடும், ஷ்ரேயாவோடும் டூயட் பாட ஆரம்பிக்கிறார்.
உண்மையில் விக்ரம் இந்தப் படத்துக்கு
எட்டுகோடி சம்பளம்  வாங்கினாராம். அது இனிமேல் இரண்டு கோடியாக மாற விக்ரமுக்கு இந்த ஒரு படமே
போதும்.

சுசிந்திரனைப் பற்றி என்ன எழுதுவதென்றே புரியவில்லை.
மொத்தத்தில் ‘ராஜபாட்டை’ ஹீரோவும், டைரக்டரும்
தங்களுக்கும் தங்களை நம்பி படமெடுக்க வந்த தயாரிப்பாளருக்கும் சேர்த்து கட்டிய ராஜ’பாடை’ என்றுதான்
சொல்லவேண்டும்.

Share this post